Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத்திறனாளிகளுக்கு படிப்பில், பணியில் இடஒதுக்கீடு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
புதன், 7 ஜூலை 2021 (10:00 IST)
தமிழகத்தில் அரசு பணிகள் மற்றும் படிப்புகளில் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதிப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு துறை கூட்டம் நடைபெற்றுள்ளது.

அதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை தாமதமின்றி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலையில் 4 சதவீதமும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் 5 சதவீதமும், 20 நபர்களுக்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் சமவாய்ப்பு வழங்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments