Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு ஏதாவதுன்னா தமிழக அரசு சும்மா விடாது..! – மு.க.ஸ்டாலின் உறுதி!

Webdunia
செவ்வாய், 26 ஜூலை 2022 (12:14 IST)
சமீப காலமாக மாணவிகள் தற்கொலை சம்பவம் அதிகரித்துள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து திருவள்ளூரிலும் மாணவி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் குருநானக் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து பேசியபோது “சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் என்னை மனவேதனை அடைய செய்துள்ளன. பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல்ரீதியாக தொல்லை நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு மன, உடல்ரீதியாக நடக்கும் துன்புறுத்தல்களை தமிழக அரசு வேடிக்கை பார்க்காது.

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது. பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். உயிரை விடும் சிந்தனைகளை தவிர்த்து உயிர்பிக்கும் சிந்தனைகளை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

காமராஜர் ஏசியிலதான் தூங்குவாரா? அவரை அசிங்கப்படுத்துவதே திமுகதான்! மன்னிப்பு கேட்கணும்! - அன்புமணி ஆவேசம்!

கீழடி ஆய்வின் உண்மையை மறைக்க மத்திய அரசு முயற்சி!? - கீழடி ஆய்வாளர் அமர்நாத் ஆவேசம்!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments