Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட், டாஸ்மாக் எதிராக போராடிய வழக்குகளும் வாபஸ்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:41 IST)
தமிழகத்தில் நீட் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் ஸ்டெர்லைட், எட்டுவழிசாலை, மீத்தேன் உள்ளிட்ட பலவற்றிற்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் முன்னதாக திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் தற்போது நீட் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளும் திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகளும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 422 வழக்குகளும் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments