Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை சுட்டுக் கொல்ல முயன்ற ...திமுக முன்னாள் பிரமுகருக்கு 3 ஆண்டுகள் சிறை...!

Webdunia
வெள்ளி, 22 நவம்பர் 2019 (15:38 IST)
திமுக முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தனது மனைவியை சுட்டுக்கொல்ல முயன்றதாக அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசித்து வருபவர், அசோகன். இவர், திமுக சார்பில் திருவாரூர் சட்டசபை எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். 
 
கடந்த 2015 ஆம் ஆண்டு, இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மது குடித்து வந்து மனைவி மற்றும் மாமியார் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றுள்ளார்.
 
இதுகுறித்து, அவரது மனைவி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அசோக மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 
இவ்வழக்கை, சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரித்து வந்த நீதிபதி. ஜெ.சாந்தி, அசோகன் குற்றவாளி என்று கூறி, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments