Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருச்சியில் முக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை

திருச்சியில் முக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியால் சர்ச்சை
, புதன், 30 டிசம்பர் 2015 (13:27 IST)
திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் நமக்கு நாமே சுற்றுப் பயணத்தை குறிப்பிட்டு திருச்சியில் முக அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால், திமுக தொண்டர்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த மாதம் முழுவதும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டார், இந்நிலையில், திருச்சி அருகே உள்ள பச்சைமலை பகுதிகளில்  சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பல்வேறு இடங்களில் அவரை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு இருந்தது.
 
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அழகிரி ஆதரவாளர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. நமக்கு நாமே திமுக மீட்புப்பயணம் என குறிப்பிட்டு, கருணாநிதி படத்துடன் அழகிரி படத்தையும் சேர்த்து ஒட்டப்பட்டு இருந்தது. இந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளால் மீண்டும் முக ஸ்டாலின், முக அழகரி ஆதரவாளர்களுக்கு மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
 
2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு கீழே கிளிக் செய்யவும்.....

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம்

Share this Story:

Follow Webdunia tamil