Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் ஆலோசனை கூட்டம்; திமுகவோடு வாய்ப்பில்லை! – அழகிரியின் அரசியல் ப்ளான்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (10:51 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மு.க.அழகிரி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு பரபரப்பாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் திமுகவிலிருந்து விலகிய மு.க.அழகிரி புதிய கட்சி தொடங்கபோவாதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அதுகுறித்து மு.க.அழகிரி எதுவும் பேசாமலே இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மதுரையில் ஆதரவாளர்களோடு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர் “ஜனவரி 3ம் தேதி எனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்த உள்ளேன். ஆலோசனைக்கு பிறகு கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

மேலும் “திமுகவில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments