Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவமனையில் துக்ளக் சோவுக்கு ஆறுதல் கூறிய மு.க. அழகிரி

மருத்துவமனையில் துக்ளக் சோவுக்கு ஆறுதல் கூறிய மு.க. அழகிரி
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (23:47 IST)
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் ஆசிரியர் சோ -வை திமுக முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

 
கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவால், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க. தலைவர் ராமதாஸ், விடுதலை. சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் என்.சி.பி.வடிவேல் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், துக்ளக் ஆசிரியர் சோ -வை , சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் ஆசிரியர் சோ -வை திமுக முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இருவரும் சுமார் சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டு இருந்தனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil