Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டின் பூட்டை உடைத்து பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!

J.Durai
திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் பணராஜா மனைவி சுதா. பணராஜா பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் சுதா இன்று வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு, ஊரில் உள்ள தோட்டத்திற்கு விவசாயம் செய்ய சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
 
வீட்டிற்குள் உள்ளே சென்று பார்த்த போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பிரோவில் இருந்த 23 அரை பவுன் நகை, 4 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றிருந்தை அறிந்து சேடபட்டி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
 
தகவலறிந்து விரைந்து வந்த சேடபட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டின் முன் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments