Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநரை கேள்விகேட்க எங்களுக்கு உரிமையில்லை: அமைச்சர் ரகுபதி

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (14:30 IST)
ஆளுநரை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கேள்வி கேட்டால் நாங்கள் பதில் அளிக்கும் உரிமை மட்டுமே உள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு கவர்னர் இன்னும் கையெழுத்திடவில்லை. நேற்றுடன் அவர் கையெழுத்திடவில்லை என்பதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆளுநரின் இந்த போக்கை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் ரகுபதி இது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 
 
ஆளுநர் மசோதாவில் ஏன் கையெழுத்து போடவில்லை என்று அவரை கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை என்றும் அவர் கேள்வி கேட்டால் பதில் அளிக்கும் உரிமை மட்டுமே எங்களிடம் உள்ளது என்றும் அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார். மேலும் ஆன்லைன் விளையாட்டு தடை மசோதாவில் ஆளுனர் ஏன் கையெழுத்திடவில்லை என தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகளை வெறும் 700 ரூபாய்க்கு விற்பனை செய்த இளம்பெண்.. என்ன காரணம்?

நெல்லை மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் தகவல்..!

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments