Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு தர பரிசீலனை! – கூட்டணிக்காகவா? மாநாட்டிற்காகவா?

Webdunia
வெள்ளி, 23 அக்டோபர் 2020 (13:04 IST)
பாமகவின் இடஒதுக்கீடு கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அதிமுக அமைச்சர் கூறியிருப்பது கூட்டணியை காப்பாற்றும் முயற்சியா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், இதுகுறித்து வரும் புத்தாண்டில் மாபெரும் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

பாமகவின் கோரிக்கை குறித்து தற்போது பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “வன்னியர் சமூகத்தினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இதுதொடர்பாக அரசு முடிவெடுக்கும்” என கூறியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறியதை தொடர்ந்து தேர்தலில் கூட்டணியை நீட்டிக்க இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டுள்ளதா அல்லது கொரோனா காலத்தில் பெரும் மாநாடு நடத்தப்படுவதன் பாதிப்புகளை தவிர்க்க முன்கூட்டியே பரிசீலனை செய்வதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதா என அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments