Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்கள் எதிர்ப்பு: நீட் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ஓடிய விஜயபாஸ்கர்!

பொதுமக்கள் எதிர்ப்பு: நீட் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு ஓடிய விஜயபாஸ்கர்!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (11:47 IST)
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போராடிய மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பின்னர் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


 
 
நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல், ரயில் மறியல், மனிதச்சங்கிலி என போராட்டங்கள் நடத்தினர். இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
 
இந்நிலையில் நேற்று நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களுக்கு தேர்வு பெற்ற மாணவர்களுக்கான முதல் வகுப்பு துவக்க விழா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது.
 
இந்த துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றிருந்தார். இதனையடுத்து துவக்க விழா நடைபெற இருந்த புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லுரியை பொதுமக்கள் மற்றும் இயக்கங்களை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர்.
 
அவர்களை காவல்துறையினர் கைது செய்தாலும், அடுத்தடுத்து பல்வேறு குழுக்கள் வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு கிளம்பிவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments