Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சராக இருக்கும் போதே கைதாகிறாரா விஜயபாஸ்கர்?

அமைச்சராக இருக்கும் போதே கைதாகிறாரா விஜயபாஸ்கர்?

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (15:24 IST)
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


 
 
அந்த ஆவணங்களில் ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வந்தன. இதனை அறிக்கையாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது வருமான வரித்துறை. இதனையடுத்து ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் தேர்தலை ரத்து செய்தது.
 
மேலும் இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மேலும் சில ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டு வருமான வரித்துறை புலனாய்வுத்துறை அலுவலகத்துக்கு அழைத்துள்ளது வருமான வரித்துறை. அவர் இன்று அங்கு ஆஜராகி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
 
முன்னதாக சேகர் ரெட்டி கைதான போது விஜயபாஸ்கர் தனது பிஸ்னஸ் கூட்டாளி என கூறியதாகவும், விஜயபாஸ்கர் குறித்து பல்வேறு தகவல்களை சேகர் ரெட்டி கூறியதாகவும் தகவல்கள் வந்தன. இந்நிலையில் இன்றை விசாரணை முடிந்ததும் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாமலே அவர் அமைச்சராகவே கைது செய்யப்பட்டால் இது நாடு முழுவதும் பரவி தமிழகத்துக்கு அவப்பெயரை உருவாக்கும். இதனால் தான் பல அரசியல் கட்சி தலைவர்கள், விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

ஹோம்வொர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்.. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்ட மாணவன்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments