Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்மர் வந்தாச்சு... பவர் கட்டும் கூடவே வருமா? அமைச்சர் விளக்கம்!!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (13:18 IST)
கோடைகாலத்தில் மின்வெட்டு இருக்குமா என அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார். 
 
தமிழகத்தில் வெயில் காலம் துவங்கியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியூட்டியது. 
 
மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இருப்பினும் பவர் கட் அவ்வப்போது ஒரு நாளில் இருக்க தான் செய்கிறது. இதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் அமைச்சர் தங்கமணி. அவர் கூறியுள்ளதாவது, கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்கும் அளவுக்கு மின் உற்பத்தி உள்ளது. எனவே மின்வெட்டுகளை நினைத்து வருந்த வேண்டாம். 
 
அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. நாளை முதல் அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments