மின் தடை வேறு: மின்வெட்டு வேறு! குழம்பாதீங்க! – அமைச்சர் தங்கமணி விளக்கம்!

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (12:44 IST)
ஊரடங்கை பயன்படுத்தி பல இடங்களில் மின்வெட்டு செய்யப்படுவதாக பேசப்பட்ட நிலையில் அதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பல இடங்களில் சூறை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கனமழை பெய்த பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. இதை பலர் தமிழகத்தில் மின்வெட்டு செய்வதாக கூறிய நிலையில் அதுகுறித்து அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் “மின்வெட்டுக்கும், மின் தடைக்கும் வேறுபாடு உள்ளது. இயற்கை பேரிடர்களால் தற்காலிகமாக மின்சாரம் தடைபடுவது மின் தடை. தமிழகத்தில் ஏற்பட்டிருப்பது மின் தடைதானே தவிர, தமிழகத்தில் எங்கும் மின்வெட்டு இல்லை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சபாநாயகர் யார்? பாஜக, ஜேடியூ இடையே கடும் போட்டி..!

நாளை பிரதமர் மோடி - எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு.. முக்கிய பேச்சுவார்த்தையா?

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments