போக்குவரத்து தொழிலாளர்களுடன் நாளை பேச்சுவார்த்தை: உடன்பாடு ஏற்படுமா? போராட்டம் தொடருமா?

Mahendran
வியாழன், 18 ஜனவரி 2024 (12:36 IST)
போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை பேச்சு வார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ள நிலையில் நாளைய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? அல்லது  மீண்டும் போராட்டம் தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  
 
ஊதிய உயர்வு,  ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சமீபத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்  
 
ஆனால் பொங்கல் திருவிழாவின் போது போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசிய போது போக்குவரத்து தொழிலாளர்களுடான  நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் 1 வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments