அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (16:28 IST)
அமலாக்கத்துறை சமீபத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ள நிலையில்,  இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம், இவ்வழக்கை, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

அவருக்கான நீதிமன்றக் காவல் செப்டம்பர் 15வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலஜி  ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அல்லி அறிவித்திருந்தார்.

இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments