அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை: எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாக தகவல்..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:07 IST)
சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து அதிகமாக இருக்கும் ரத்த அழுத்தத்தை குறைக்க சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் காரணமாக சிறப்பு குழுவினர் காலையிலேயே சிகிச்சையை தொடங்கி உள்ளதாகவும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் கிடைத்த பிறகு சிகிச்சையை தொடர்வதா என்பதை மருத்துவக் குழு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பு இரத்த பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர் குணமான பின் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் என்றும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments