Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி! – அமைச்சர் செங்கோட்டையன்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:19 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓராண்டு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதை இரண்டு வருடமாக நீட்டிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நீட் தகுதி தேர்வுக்கு அமலுக்கு வந்தது முதலாக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முக்கியமாக நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களில் அதிக தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் நீட் தேர்வுக்கு எவ்வாறு பயிற்சி பெறுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஒரு ஆண்டு மட்டுமே இலவச பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நீட் இலவச பயிற்சியை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள். பெற்றோர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், மாணவர்கள் விரும்பினால் இரண்டாவது ஆண்டும் நீட் பயிற்சியை இலவசமாக அரசு பயிற்சி மையங்களில் மேற்கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments