Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை நம்பாதீங்க.. கடனை கட்டுற வழிய பாருங்க – அமைச்சர் செல்லூர் ராஜு

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (17:22 IST)
கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடனை எப்படி ஸ்டாலின் தள்ளுபடி செய்வேன் என கூறினார்? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மதுரவாயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜு. அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் ”திமுகவை விட தரமான பொருட்களையும், சலுகைகளையும் மக்களுக்கு வழங்கி வருகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என ஸ்டாலின் பேசினார். எதன் அடிப்படையில் அவர் இப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் இது மக்களை ஏமாற்றும் செயல். அவரது பேச்சை நம்பி யாராவது கடனை செலுத்தாமல் இருந்தால் முறைப்படி அவரவர் கடன் தொகையை செலுத்திவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

ஓபன் ஏஐ முறைகேட்டை வெளிப்படுத்திய இந்தியர் மரணம்.. தற்கொலை என முடிக்கப்பட்ட வழக்கு..!

டெல்லி ரயில் நிலையத்தில் அதிகரிக்கும் கூட்டம்.. பிளாட்பார்ம் டிக்கெட் நிறுத்தம்..!

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments