Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களெல்லாம் அந்த காலத்துல…. – மாணவர்களுக்கு செல்லூர் ராஜூ அறிவுரை

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:45 IST)
மதுரையில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் ”நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்துதான் படித்தோம். இதுபோன்ற மேசைகள் அப்போது இல்லை. இன்று மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. தரையில் அமர்ந்து படித்துதான் இன்று அமைச்சராகி உள்ளோம். மாணவர்கள் நன்றாக படித்து இதுப்போன்ற உயர்பதவிகளுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக முதலிடத்தில் கேரளா இருந்தது. தமிழக அரசு கல்விக்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் இன்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments