Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பக்தர்களில் தேவைக்காக சபரிமலையில் அதிகாரிகள்! – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (09:46 IST)
தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு உதவ இரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் பலர் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு மாலை போட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சபரிமலை செல்லும் நிலையில் அவர்களுக்கு தேவையான உதவி மற்றும் வழிகாட்டுதலுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் ”தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் தேவையை கவனிக்க கேரள அரசின் ஒத்துழைப்புடன் சபரிமலையில் இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சன்னிதானத்தில் இவர்கள் பணியில் இருப்பார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments