Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகைக்கடன் தள்ளுபடி; விரைவில் அரசாணை! – ஐ.பெரியசாமி தகவல்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (15:08 IST)
அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிக்க சில காலங்களே இருந்த இறுதி நிலையில் புதிய அறிவிப்புகள் சில அறிவிக்கப்பட்டன. அதில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் ரத்து செய்யும் ஆணையும் ஒன்று. கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை வைத்து நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டது.

தற்போது திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் அந்த ஆணை பரிசீலிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி “கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் கடன் தள்ளுபடியில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை விடுமுறை எதிரொலி: ஊட்டி சிறப்பு மலை சீசன் ரயில் இன்று முதல் தொடக்கம்..!

இனி 5 வயதில் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க முடியாது: வயது வரம்பை உயர்த்தி உத்தரவு..!

பங்குச்சந்தையில் மீண்டும் ஏற்றம்.. சில நாட்களில் சென்செக்ஸ் 80 ஆயிரத்தை நெருங்குமா?

தவெக பொதுக்குழுவில் அறுசுவை உணவு.. 21 வகையான மெனு விவரங்கள்..!

ரம்ஜான் கொண்டாட்டம்; 500 இந்தியர்களை விடுதலை செய்ய அரபு அமீரகம் முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments