Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி: சென்னை விழாவில் பரபரப்பு

Webdunia
திங்கள், 24 பிப்ரவரி 2020 (21:24 IST)
அதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் என அமைச்சர் மாற்றி கூறியதும் அந்த விழாவில் அதிகாரி ஒருவர் தூங்கி விழுந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். சாலிகிராமத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகையை வழங்கினார்
 
இந்த விழாவில் அவர் பேசியபோது சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியை சேலம் மாவட்ட ஆட்சியர் என மாற்றி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவில் கலந்து கொண்ட சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஒருவர் தூங்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கியதை பார்த்து அருகில் உள்ள அதிகாரி ஒருவர் அவரை தட்டி எழுப்பியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அரசு விழா ஒன்றில் கலெக்டர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் குறித்தும், தூங்கிய அதிகாரிகள் குறித்தும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments