Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியும் சீன அதிபரும் தமிழகம் வந்ததற்கு யார் காரணம் தெரியுமா? அமைச்சர் ஆர்.வி.உதயகுமார்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (21:44 IST)
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரின் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு குறித்த இடத்தை யார் தேர்வு செய்தது? என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.
 
மாமல்லபுரத்தை சீன அதிபர் முடிவு செய்ததாகவும், மத்திய அரசுதான் முடிவு செய்ததாகவும், தமிழக அரசு தான் முடிவு செய்ததாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் உதயகுமார் இதுகுறித்து கூறியபோது, ‘இந்திய பிரதமரையும் , சீன அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து, தமிழன் புகழை உலகறிய செய்தவர் நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் அனைவருக்கும் புதியதாக உள்ளது
 
இன்று மதுரை தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மேலும் முதல்வர் குறித்து கூறியதாவது:
 
தன் தாய் தந்தையர் புண்ணியத்தால் உழவராக, தாய் மண்ணில் பிறந்து உழைப்பால் தாய் தமிழ்நாட்டில் முதல்வராய் உயர்ந்து இன்றைக்கு, மதி நுட்பத்தாலும், அறிவாற்றலாலும் எளிமையாலும், கருணையாலும், நிர்வாகத் திறமையாலும், தொலை நோக்கு திட்டத்தாலும், மக்களின் செல்வாக்கிலும், கவுரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர், சாமனிய முதல்வர், மாணவ சமுதாயத்தின் விடிவெள்ளி, இளைய சமுதாயத்தின் வழிகாட்டி முதல்வர், பாரத பிரதமரையும், சீன அதிபரையும் தமிழகத்திற்கு அழைத்து தமிழன் புகழை உலகறிய செய்த ஓய்வில்லா உழைப்பாளி, அன்பின் அடையாளம் என அடுக்கு மொழியில் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments