Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:11 IST)
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி விட்டது என்பதும் அந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்து  கொண்டிருப்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் உறுதி செய்தது
 
இதனை அடுத்து சென்னையில் காற்றுடன் கூடிய பலத்த மழை தற்போது பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அதே நேரத்தில் புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார் 
 
மேலும் 36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றும் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார். இவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிவாரண படையினர் மற்றும் பேரிடர் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாட்டில் 72.09% வாக்குபதிவு..! அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69% வாக்குகள் பதிவு..!!

கோவையில் இயந்திர கோளாறு எதிரொலி: இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிப்பு..!

பரந்தூரிலும் தேர்தல் புறக்கணிப்பு.. 13 பேர் மட்டுமே வாக்களித்ததால் பரபரப்பு..!

சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை..! அண்ணாமலை புகார்..!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நிறைவு..! சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments