Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (11:50 IST)
வேலூர் தொகுதி சென்ற மாதம் தான் திமுகவின் கோட்டையாக இருந்தது எனவும், தற்போது இல்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூரில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறித்து கேள்வி எழுப்பியபோது, வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறிவருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வேலூர் தேர்தலில் அதிமுக–விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது எனவும், இனிமேல் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தலில் அதிமுக-வின்  வெற்றி அமையவுள்ளது எனவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments