Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அது போன மாசம், இது இந்த மாசம்”…வேலூர் தொகுதி குறித்து ராஜேந்திர பாலாஜி

Webdunia
திங்கள், 22 ஜூலை 2019 (11:50 IST)
வேலூர் தொகுதி சென்ற மாதம் தான் திமுகவின் கோட்டையாக இருந்தது எனவும், தற்போது இல்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விழா முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது வேலூரில் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை குறித்து கேள்வி எழுப்பியபோது, வேலூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று பலர் கூறிவருகிறார்கள், ஆனால் அது போன மாதம் தான். இப்போது வேலூர் தொகுதி அதிமுக-வின் கோட்டையாக உள்ளது. அதுவும் உறுதியான எக்கு கோட்டையாக உள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் வேலூர் தேர்தலில் அதிமுக–விற்கான வெற்றி வாய்ப்பு வலுவாக உள்ளது எனவும், இனிமேல் திமுக எந்த தேர்தலிலும் போட்டியிடத் தயங்கும் அளவிற்கு வேலூர் தேர்தலில் அதிமுக-வின்  வெற்றி அமையவுள்ளது எனவும் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments