Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசை எந்தத் தொகுதியில் நின்றாலும் டெபாசிட் கிடைக்காது: அமைச்சர் ரகுபதி

Mahendran
புதன், 20 மார்ச் 2024 (14:09 IST)
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் எந்த தொகுதிகள் என்றாலும் அவர் டெபாசிட்டுக்கு போராட வேண்டும் என்று கூறினார்

தமிழ்நாடு ஆளுநர் கூட பிகாரில் சென்று போட்டியிடுவார் என்று செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது, அப்படி நடந்தால் அது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி எங்களுக்கு தூக்கம் இல்லை என்று கூறினார் ஆனால் நாங்கள் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டு சிறப்பான தேர்தல் பணியை களத்தில் ஆற்றி வருகிறோம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments