Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரை நாங்கள் குறை சொல்லவே இல்லை: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (14:45 IST)
ஆளுநரை நாங்கள் குறை சொல்லவே இல்லை என்றும் மசோதாவுக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்கிறார் என்று மட்டுமே கூறினோம் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் கூறியுள்ளார்.
 
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திடாததால் அந்த மசோதா காலாவதி ஆகி விட்டதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இது குறித்து பேசியபோது, ஆன்லைன் ரம்மியை தடை விதிக்கும் வகையில் இந்தியாவிற்கே முன் மாதிரியான ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளோம் என்றும் இந்த சட்டத்திற்கு அரசாணை வெளியிடாததில் எந்த தவறும் இல்லை என்றும் அரசாணை ஏன் வெளியிடவில்லை என்பதற்கான காரணத்தை ஆளுநரிடம் தெரிவித்து விட்டோம் என்றும் கூறினார்
 
மேலும் ஆளுனரை நாங்கள் குறை சொல்லவில்லை என்றும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் செய்கிறார் என்று மட்டுமே கூறினோம் என்றும் ஆளுனர் தரப்பிலிருந்து எத்தனை முறை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் துறை அமைச்சர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments