அண்ணாமலை ஆளுநரா...? ஆர்.என்.ரவி ஆளுநரா..? அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:03 IST)
தமிழகத்தில் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா என்று சந்தேகமாக இருக்கிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் 
 
இந்த மசோதாவில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு விளக்கம் கேட்டு அவர் திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் கேட்ட விளக்கம் அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் அவர் திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் ஆளுநர் என்னென்ன விளக்கம் கேட்டார் என்பதை எல்லாம் அண்ணாமலை கூறியதை பார்க்கும்போது இந்த மசோதா குறித்து இருவரும் விவாதம் செய்தார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆர்என் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் தடை செய்தால் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments