Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை ஆளுநரா...? ஆர்.என்.ரவி ஆளுநரா..? அமைச்சர் ரகுபதி ஆவேசம்..!

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2023 (08:03 IST)
தமிழகத்தில் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா என்று சந்தேகமாக இருக்கிறது என அமைச்சர் ரகுபதி ஆவேசமாக பேட்டி அளித்துள்ளார். 
 
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் தடை மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் 
 
இந்த மசோதாவில் உள்ள சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு விளக்கம் கேட்டு அவர் திருப்பி அனுப்பி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சட்ட அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர் கேட்ட விளக்கம் அனைத்திற்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனாலும் அவர் திருப்பி அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்தார் 
 
மேலும் ஆளுநர் என்னென்ன விளக்கம் கேட்டார் என்பதை எல்லாம் அண்ணாமலை கூறியதை பார்க்கும்போது இந்த மசோதா குறித்து இருவரும் விவாதம் செய்தார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆர்என் ரவி ஆளுநரா அல்லது அண்ணாமலை ஆளுநரா  என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆன்லைன் தடை செய்தால் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments