Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (13:49 IST)
தமிழகத்தில் நீண்ட காலம் கழித்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “மாணவர்கள் பல மாதங்கள் கழித்து பள்ளிகளுக்கு வருகை புரிய உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் நீண்ட காலமாக வீடுகளிலேயே இருந்ததால் கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க ரூ.200 கோடி செலவில் வாசிப்பு இயக்க தொடங்கப்படவுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments