Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் படிப்பதை ஊக்குவிக்க வாசிப்பு இயக்கம்! – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (13:49 IST)
தமிழகத்தில் நீண்ட காலம் கழித்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வாசிப்பு இயக்கம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “மாணவர்கள் பல மாதங்கள் கழித்து பள்ளிகளுக்கு வருகை புரிய உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் நீண்ட காலமாக வீடுகளிலேயே இருந்ததால் கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை தவிர்க்க ரூ.200 கோடி செலவில் வாசிப்பு இயக்க தொடங்கப்படவுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments