Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிலடி

Sinoj
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:05 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையில் கருத்துக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

வடமாநிலங்களில் பாஜக கட்சி பல மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது. ஆனால், தென்மா நிலங்களாக, தமிழ் நாடு, கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜக ஜெயிக்க வேண்டி பல முயற்சிகளில் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைவராகஅண்ணாமலை உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில்  ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.
 

இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், ''ஒரு ஒப்பீட்டுக்கு-- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்...
 
BJP கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று....அதாவது, குழந்தைகள்,  ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம்! 
 
அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா...என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments