Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100% தமிழர்களுக்கு வேலை; 40% பெண்களுக்கு ஒதுக்கீடு! – அமைச்சர் பிடிஆர் அதிரடி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 13 செப்டம்பர் 2021 (13:39 IST)
தமிழக தேர்வு முகமையால் நடத்தப்படும் அரசு பணி தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் சேர்க்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை திமுக அளித்தபோது தமிழக அரசு பணிகளில் தமிழக இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தேர்வு முகமையால் நடத்தப்படும் அரசு பணி தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும் எனவும், அரசு பணிகளில் இதுவரை பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்த நிலையில் அதை 40% ஆக உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழ் தகுதித்தேர்வாக சேர்க்கப்படுவதால் தமிழக இளைஞர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு இதன் மூலம் உறுதிப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!

இந்தியா மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.. ஆனால்..? - வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி!

நாங்கள் போரை விரும்பவில்லை.. ஆனால் பாகிஸ்தான் துப்பாக்கியை கீழே போட வேண்டும்: ஒமர் அப்துல்லா

ஆபரேஷன் சிந்தூர்.. தாக்குதல் செய்த இடத்தை தேர்வு செய்தது எப்படி? 2 பெண் ராணுவ அதிகாரிகள் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments