Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிப்பை பார்க்க சென்ற அமைச்சர் பொன்முடி! சேற்றை வீசி அனுப்பிய மக்கள்! - விழுப்புரத்தில் பரபரப்பு!

Prasanth Karthick
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (13:33 IST)

விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் மீது மக்கள் சேற்றை வாரி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் பாண்டிச்சேரி, விழுப்புரம் பகுதியில் கரையை கடந்த நிலையில் பல இடங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியும் வருகின்றனர்.

 

இந்நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதியில் அவர் பார்வையிட சென்றபோது, உதவிகள் சரியாக கிடைக்கப்பெறாததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

ஆத்திரத்தில் மேலும் சிலர் சேற்றை வாரி வீசியதால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. பின்னர் அப்பகுதியை பார்வையிட்ட பின் அமைச்சர் பொன்முடி மற்ற கிராமங்களை பார்வையிட புறப்பட்டு சென்றார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments