தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் வெளியான அறிவிப்பு: தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் குறித்து அமைச்சர் பொன்முடி..!

Webdunia
வெள்ளி, 26 மே 2023 (10:55 IST)
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக நேற்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 
 
இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஒரு சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது!
 
எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம். பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் நடித்த 'புலன் விசாரணை' படம்கூட சுவாரசியமாக இருக்கும்; ஆனால் சி.பி.ஐ. புலன் விசாரணை சரியாக இருக்காது: சீமான்

வாய்மையே வெல்லும்! சிபிஐ விசாரணை குறித்த உத்தரவு குறித்து ஆதவ் அர்ஜூனா ட்வீட்..!

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை கோரியவரை திமுக அரசு மிரட்டியதா? அதிமுக கேள்வி..!

இரவு நேரத்தில் மாணவிகள் வெளியே செல்லாதீர்கள்.. மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து மம்தா பானர்ஜி..!

10 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை சிறுவர் இல்ல காப்பாளர்.. தாயிடம் சிறுவன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments