Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை செல்வது பாத யாத்திரையா, பஸ் யாத்திரையா? - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (11:05 IST)
அண்ணாமலை செல்வது யாத்திரையா, அல்லது பஸ் யாத்திரையா? என அமைச்சர்
கே.ஆர்.பெரியகருப்பன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக பாதயாத்திரை சென்று கொண்டிருக்கிறார் என்பதும் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு பெருகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன்  அண்ணாமலை செல்வது பாதயாத்திரை? அல்லது பஸ் யாத்திரையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.  
 
மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜகவினர் முதலமைச்சர் மீது சில குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர் என்றும் அவர்களது பாராட்டுகளை திமுக அரசு எந்த காலத்திலும் எதிர்பார்க்காது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார். 
 
மேலும் விலைவாசியை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் இது பரிசீலனையில் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments