Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாறிப்போன வினாத்தாள்? தேர்வுகள் ரத்து! – நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (13:59 IST)
சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை பல்கலைகழகத்தில் இன்று செமஸ்டர் தேர்வுகள் தொடங்கிய நிலையில் காலை தமிழ் பாடத்திற்கான வினா தாள்கள் வழங்கப்பட்டன. ஆனால் அதில் இருந்த கேள்விகள் தாங்கள் படித்த பாடத்தில் கிடையாது என மாணவர்கள் சொன்னதால் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் 3வது செமஸ்டர் தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக 4வது செமஸ்டர் வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதனால் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மாணவர்களுக்கு தவறுதலாக வழங்கப்பட்ட 4வது செமஸ்டர் தேர்வின் தமிழ் வினாத்தாள் கடந்த ஆண்டு வினாத்தாள்தான் என்றும், எனினும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments