Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா சாலை பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (22:41 IST)
கரூரில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் அம்மா சாலை பணியை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு.
 
கரூர் குளத்துப்பாளையம் பகுதியில் ரூபாய் 21.12 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அம்மா சாலை பணிகளை தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
 
கரூர் பெரிய குளத்துப்பாளையம் பகுதியில் சுமார் 21.12 கோடி மதிப்பில் 40 அடி அகலத்தில் 2.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும்  இந்த அம்மா சாலைப் பணியை தமிழக போக்குவரத்து அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
 
அம்மா சாலை பணி நிறைவு பெறும் போது கரூரில் முக்கிய சாலையான செங்குந்தபுரம், காமராஜபுரம்,ராமகிருஷ்ணபுரம், மகாத்மா காந்தி சாலை,வையாபுரி நகர், கோவை சாலை போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்
குறையும்.
 
மேலும், சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்து, கரூர் நகரில் ஜவுளி நிறுவனங்களுக்கு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யவும், நிறுவனங்களில் பணிபுரியும்  பணியாளர்கள் எளிதாக சென்றுவர உபயோகமாக இருக்கும்.
 
மேலும் சாலைப் பணி எந்த அளவு முடிவு பெற்று உள்ளது, அம்மா சாலைப் பணி விரைவாக நடந்து வருகிறது என்று அலுவலர்களிடம் கேட்டறிந்த அமைச்சர் பின்னர் அம்மா சாலைப் பணியை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments