Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு

அதிமுக அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு
, வியாழன், 8 அக்டோபர் 2015 (02:57 IST)
விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் மோகனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி வகித்த 19 அமைச்சர்களில் 18 பேர்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
 
ஆனால், விழுப்புரம் தெற்கு மாவட்டச்செயலாளராக இருந்த அமைச்சர் ப.மோகனின் பதவியை அதிரடியாக பறித்துள்ளார். அவருக்கு பதிலாக, அங்கு புதிய மாவட்டச் செயலாளராக கதிர் தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மாவட்டச் செயலாளர் பதவி போனால் போகட்டும், தற்போது கையில் உள்ள அமைச்சர் பதவியாவது தப்பினால் போதும் என கடவுளை வேண்டிக் கொண்டுள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிவின் இந்த அதிரடி காரணமாக, அமைச்சர் ப.மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil