Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 4வது கொரோனா அலையா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:00 IST)
தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது நான்காவது கொரோனா அலையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் கூறிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நான்காவது கொரோனா அலை என்று கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தாலும் கொரோனா பரவல் தீவிரமாக இல்லை என்றும் அதனால் பெரிய அளவிலான பதட்டமான சூழ்நிலை இல்லை என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா பாதிப்பு தன்மை வீரியமாக இல்லை என்பதால் தற்போதைய நிலையை 4வது கொரோனா அலையாக கருத இயலாது என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments