Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவங்களுக்கு அரிசி, கோதுமை மட்டும்தான்; உங்களுக்குதான் எல்லாம்! – அமைச்சர் காமராஜ்

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (15:35 IST)
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்படுவது குறித்து அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் நேற்று முதலாக தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் எந்த பகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம் வெளி மாநிலத்தவர்களும் தமிழகத்திற்குள் ரேசன் பொருட்களை பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதால் ரேசன் பொருள் பற்றாக்குறை ஏற்படுமோ என மக்களிடையே ஐயம் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் “மக்களுக்கு எந்த இடர்பாடுகளும் எழாமல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும். அனைத்து ரேசன் கடைகளிலும் தேவையான அளவு ரேசன் பொருட்கள் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிமாநில மக்களுக்கு ரேசன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழக மக்களுக்கு வழக்கம்போல வழங்கப்படும் எண்ணெய், பருப்பு, சர்க்கடை ஆகியவை தொடர்ந்து விநியோகிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments