Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு: மிரட்டும் அதிமுக அமைச்சர்!

இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு: மிரட்டும் அதிமுக அமைச்சர்!

Webdunia
புதன், 26 ஜூலை 2017 (09:34 IST)
அதிமுக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் செய்த சட்ட விரோத செயலை தடுத்து காவல்துறையில் புகார் அளித்த இந்து முன்னணியினர் மீது அமைச்சர் தனது ஆதரவாளர்கள் மூலம் தாக்குதல் நடத்தி அவர்கள் மீதே வழக்கு பதிவு செய்ய முயற்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை அதிமுக அமைச்சர் கே.சி கருப்பணனின் தனது ஆதரவாளர்களின் பொக்லைன் மூலன் சட்ட விரோதமாக திருடி எடுத்து செல்ல முயற்சித்தபோது இந்து முன்னனி நிர்வாகிகள் அதனை தடுத்துள்ளனர்.
 
இதனால் அமைச்சர் தனது அடியாட்கள் மூலம் இந்து முன்னணியினர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி அவர்களை அந்த இடத்தை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்து முன்னணியினர் கவுந்தப்பாடி காவல் நிலையத்தில் தங்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.
 
இந்நிலையில் காவல்நிலையத்துக்கு நேராக வந்த அமைச்சர் இந்து முன்னணியினரை மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர்களை பார்த்து, என்னப்பா உங்களுக்கு பிரச்சனை என மிரட்டும் தொனியில் பேசிவிட்டு, இவனுக எல்லார் மீதும் கேஸ் போட்டு உள்ளே தள்ளு என போலீசாருக்கும் உத்தரவு போட்டுவிட்டு அவர் கிளம்பியதாக தகவல்கள் வருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments