Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை யாரும் பழி வாங்கவில்லை - அதிமுக!!

Webdunia
வியாழன், 6 பிப்ரவரி 2020 (14:05 IST)
இது ஜனநாயக நாடு, இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது அமைச்சர் ஜெயகுமார் விளக்கம். 
 
பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நெய்வேலியில் நடந்துக்கொண்டிருந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று விஜய்யிடம் சம்மன் வழங்கி அவரை அங்கிருந்து விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர்.
 
இன்று முதற்கொண்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக விஜய்க்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் We Support Vijay என்ற ஹேஷ்டேகுகளை சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இது விஜய் மீதான பழிவாங்கல் என விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இது ஜனநாயக நாடு, இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது. வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்மந்தம் இல்லை. அவர்கள் கடமையை செய்து வருகிறார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக விளக்கம்  அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments