Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் மெகா கூட்டணி... கன்ஃபர்மேஷன் கொடுத்த ஜெயகுமார்!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (10:47 IST)
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, பாமக அடங்கிய மெகா கூட்டணி அமையும் என ஜெயகுமார் கருத்து. 
 
ஓ.பன்னீர் செல்வம்  மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. ஆம், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமார் அதிமுக கூட்டணி குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் தேமுதிக, பாமக அடங்கிய மெகா கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பயத்தால் வீட்டிற்குள்ளேயே இருந்த கமல், வாக்குகளுக்காக மக்களை சந்திக்க செல்கிறார் எனவும் கமலை விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments