Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு நீட் வேணும்; ஆனா எங்களுக்கு வேணாம்! – அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (12:21 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இறந்த நிலையில் அதற்கு காரணம் திமுகதான் என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முன்னதாக நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெருமளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் பல நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்ய தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நீட் விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு காரணமே திமுகதான். நீட் பயத்தால் மாணவர்கள் உயிரிழக்க முக்கிய காரணம் திமுகதான், அன்றே அவர்கள் அதை தடுத்திருந்தால் இந்த விளைவுகள் ஏற்பட்டிருக்காது” என்று கூறியுள்ளார்.

மேலும் கூட்டணி கட்சியான பாஜக நீட்டை ஆதரிப்பது குறித்து பேசிய அவர் “பாஜக நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தாலுன், அதிமுக நீட்டை தடை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments