Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் எடப்பாடியின் பேச்சை கேட்காத அமைச்சர் ஜெயக்குமார்!

முதல்வர் எடப்பாடியின் பேச்சை கேட்காத அமைச்சர் ஜெயக்குமார்!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (10:35 IST)
கடந்த சில தினங்களாக நடிகர் கமலுக்கும், தமிழக அமைச்சர்களுக்குமான மோதல் நடந்து வருகிறது. கமலின் கருத்துக்கு அமைச்சர்களின் விமர்சனமும் அதற்கு கமலின் பதிலடியுமாக அரசியல் களம் விருவிருப்பாக சென்று கொண்டிருக்கிறது.


 
 
கமலுக்கும் அமைச்சர்களுக்குமான மோதல் அதிகமாகி செல்ல செல்ல அது அதிமுக அரசுக்கு எதிராகவே பார்க்கப்பட்டது. இதனையடுத்து கமல் எது பேசினாலும் அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.
 
ஆனால் இதனை அமைச்சர் ஜெயக்குமார் கேட்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஊடகங்கள் இது தொடர்பாக அமைச்சர்களிடம் கருத்துக்களை கேட்க முயன்றன.
 
ஆனால் அமைச்சர் ஜெயகுமார் முதல்வர் எடப்பாடியின் அறிவுறுத்தலையும் மீறி கமலுக்கு பதில் சொல்வதில் முதல் நபராக இருக்கிறார். டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்த விளம்பர படத்தில் கமல்ஹாசனின் மகளை தான் நடிக்க வெச்சிருக்கோம். அதெல்லாம் அவருக்கு தெரியாதா? அவருக்கு பதில் சொல்றது நம்ம வேலை இல்லை. அதுக்காக அவரு பேசுறதை எல்லாம் கேட்டுட்டு அமைதியாகவே போய்ட முடியுமா என ஜெயக்குமார் பேசினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments