Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது.. அமைச்சர் துரைமுருகன்

Mahendran
வியாழன், 22 பிப்ரவரி 2024 (13:03 IST)
தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்றும் கர்நாடக மாநில அரசியல்வாதிகள் நிதி ஒதுக்கினாலும் ஆவேசமாகவும் பேசினாலும் அச்சப்படத் தேவையில்லை என்றும் சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார் 
 
சமீபத்தில் கர்நாடக மாநில பட்ஜெட் தாக்கல் செய்தபோது அதில் மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இது குறித்து இன்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது. 
 
இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தபோது, ‘தமிழ்நாட்டின் அனுமதியின்றி மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என்றும் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளதால் அதை மீறி மேகதாது அணையை கர்நாடக அரசால் கட்ட முடியாது என்றும் எனவே கர்நாடக அரசியல்வாதிகள் நிதி ஒதுக்கியதையோ அல்லது ஆவேசமாக பேசுவதையோ கருத்தில் கொண்டு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார். 
 
அமைச்சர் துரைமுருகனின் விளக்கம் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments