Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

Siva
வியாழன், 8 மே 2025 (16:02 IST)
சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சளி மற்றும் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், விரைவில் வீடு திரும்பும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இதேவேளை, தமிழக அரசின் அமைச்சரவைப் பொறுப்புகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதே சமயம், ரகுபதியின் வசமிருந்த சட்டத்துறை, துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
இதற்கு முன், அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பொன்முடி ராஜிநாமா செய்ததை அடுத்து, சில தினங்களுக்குள்ளாகவே அமைச்சரவை மாற்றம் நடைபெற்று விட்டது. இந்நிலையில், இன்னும் ஒரு முறை துறைகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பாராத விசையாக பார்க்கப்படுகிறது.
 
துறைகள் மாற்றப்பட்ட பின்னர், அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது  பரபரப்பை உருவாக்கியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

பிரியங்கா காந்தியின் இமேஜை உயர்த்திய இடைத்தேர்தல் முடிவு.. 8 மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments