Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்; மருத்துவமனை விரையும் அமைச்சர்கள்!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (19:48 IST)
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை மோசமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

கடந்த 13ம் தேதி தனது சொந்த ஊர் சென்றுக் கொண்டிருந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலன் மோசமாகி வந்த நிலையில் அவருக்கு எக்மோ கருவி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக சென்று அமைச்சரை நலம் விசாரித்து வந்தார்.

எனினும் அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் திடீரென மருத்துவமனை விரைந்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments