Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 2400 கைதிகள் விடுதலை – அமைச்சர் அதிரடி அறிவிப்பு !

Webdunia
சனி, 28 மார்ச் 2020 (08:42 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக சிறைகளில் உள்ள 2462 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 934 ஆக உள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் வேகமாகப் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் ஜாமீனில் வெளியாக இருக்கின்றனர். இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறுகையில், ''தமிழக சிறைகளில் இருந்து 2 ஆயிரத்து 462 விசாரணைக் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பரோலில் வெளியே சென்ற கைதிகளுக்கு பரோல் நீட்டிப்பு செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம். புதிதாக பரோல் கேட்கும் கைதிகளின் குற்றத்தன்மையை ஆய்வு செய்து பரோல் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. புதிதாக சிறைக்கு வரும் கைதிகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனைக்கு 300 லிட்டர் தாய்ப்பால் வழங்கிய திருச்சி பெண்.. சாதனை புத்தகத்தில் இடம்..!

பீகார் மக்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தவறில்லை: டிடிவி தினகரன்

8 மாவட்டங்களை வெளுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

தொடர் ஏற்றத்தில் தங்கம், வெள்ளி விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து வெளியேற்றம்.. இந்திய பங்குச்சந்தை மீண்டும் சரிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments