Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை! – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (16:24 IST)
அரசு பள்ளிகள் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வரும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த 2018ம் ஆண்டு முதலாக 2,831 பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நடந்து வந்தன. இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் இந்த வகுப்புகள் நிறுத்துப்படுவதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்து தமிழ்நாடு கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அரசு பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் நிறுத்தப்படவில்லை என்றும், அந்த வகுப்புகள் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments